38. அருள்மிகு ஸ்ரீநிவாசன் கோயில்
மூலவர் ஸ்ரீநிவாசன்
தாயார் அலர்மேல் மங்கை
திருக்கோலம் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்
தீர்த்தம் திருவெள்ளக்குளம், ஸ்வேத புஷ்கரணி
விமானம் தத்வத்யோதக விமானம்
மங்களாசாசனம் திருமங்கையாழ்வார்
இருப்பிடம் திருவெள்ளக்குளம், தமிழ்நாடு
வழிகாட்டி 'அண்ணன் கோயில்' என்றும் திருநாங்கூர் திவ்யதேசம் என்றும் அழைக்கப்படுகிறது. சீர்காழியிலிருந்து 11 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. சீர்காழியிலிருந்து பேருந்து வசதி உள்ளது.
தலச்சிறப்பு

Tiruvellakulam Gopuram Tiruvellakulam Moolavarசிவபெருமான் தனது ஏற்படட பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து விடுபட 'ஏகாதச ருத்ர' யாகம் ஒன்றை நடத்தினார். பூர்ணாஹுதி சமயத்தில் மகாவிஷ்ணு பிரம்மாதி தேவர்களுடன் ஸேவை சாதித்தார். சிவபெருமான் வேண்டுகோளுக்கு இணங்க, விஷ்ணு பதினோரு ரூபத்துடன், ருத்திரனுடன் நித்யவாஸம் செய்யும் ஸ்தலம்தான் திருநாங்கூர் திவ்ய தேசங்கள். இவை மொத்தம் 11 கோயில்கள்.

மூலவருக்கு 'ஸ்ரீநிவாசன்', 'அண்ணன் பெருமாள்' என்னும் திருநாமங்களுடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். தாயார் 'அலர்மேல்மங்கை' என்றும், உத்ஸவ தாயார் 'பத்மாவதி' என்றும் வணங்கப்படுகின்றார். ருத்ரர், ஸ்வேதராஜன் ஆகியோருக்கு பகவான் பிரத்யக்ஷம்.

Tiruvellakulam Utsavarதிருப்பதி பெருமாளுக்கு மூத்தவர் என்ற முறையில் 'அண்ணன் கோயில்' என்றும், தென்திருப்பதி என்றும் அழைக்கப்படுகிறது. வேங்கடேசப் பெருமாளுக்கு மேற்கொண்ட பிரார்த்தனையை இங்கேயே செலுத்துகின்றனர்.

தை மாதம் அமாவாசை தினத்திற்கு மறுநாள் நடக்கும் கருடசேவை மிக விசேஷம். திருமணிமாடக் கோயில் வாசலில் 11 திவ்யதேசப் பெருமாள்களும் கருட வாகனத்தில் எழுந்தருளி, அங்கு திருமங்கையாழ்வாருக்கும், அவரது பத்தினி குமுதவல்லிக்கும் மரியாதைகள் நடந்து பின்னர் வீதி புறப்பாடு நடக்கும் நிகழ்வு கண்கொள்ளாக் காட்சியாகும்.

திருமங்கையாழ்வார் 10 பாசுரங்கள் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com